4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
4 மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்த நிலையில், தங்கச்சிமடத்தில் மீனவ சங்கத்தினர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது, இலங்கை கடற்படையினரை கண்டித்தும், உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியும் கடலோர மாவட்ட மீனவர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர். மேலும் இலங்கையில் உள்ள மீனவர்களின் உடல்களை தமிழகம்…