இந்திய விவசாயிகளுக்கு வெளிநாட்டு பிரபலங்கள் ஆதரவு; ட்விட்டரில் வெடித்த ஹேஷ்டேக் யுத்தம்!
விவசாயிகளுக்கு ஆதரவு Vs. அரசுக்கு ஆதரவு தொடர்பான கருத்துக்கள் தற்போது ட்விட்டரில் சூடுபிடித்து இருக்கிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு…