கடலில் மூழ்குவதை தடுக்க தூத்துக்குடி வான்தீவு பனைமர வளர்ப்பு – பிரதமர் பாராட்டிய காரணம்?
கடலில் மூழ்குவதை தடுக்க, தூத்துக்குடியில் பனைமரங்கள் வளர்ப்பதை பிரதமர் நரேந்திரமோடி தனது மன்கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார். பனைமரம் வளர்க்க தூத்துக்குடி வான் தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி என்ன? தூத்துக்குடியில் மணல் திட்டுகள் கடலில் மூழ்கும் நிலை உள்ளதால் அந்த மணல் திட்டுகளில் பனைமரங்களை நட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த மரங்கள் புயல் மற்றும் சூறாவளியில் நிமிர்த்து நிற்பவை. இந்த பகுதியை பாதுகாப்பதில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தனது மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேசியிருந்தார்….