அசாம்: தாயுள்ளம் கொண்ட யானையிடமிருந்து பால் குடித்த மூன்று வயது சிறுமி!
அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில் மூன்று வயது சிறுமி யானையிடமிருந்து பால் குடித்துள்ளார். தாயுள்ளம் கொண்ட அந்த யானையும் சிறுமிக்கு நேசத்துடன் பால் கொடுத்துள்ளது. யானையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் அந்த சிறுமி திடீரென பால் குடிக்கிறார். அதை அந்த யானையும் புரிந்து கொண்டு சிறுமியை அரவணைத்துக் கொள்கிறது. அந்த சிறுமியின் பெயர் ஹர்ஷிதா போரா என்றும். யானையின் பெயர் பினு என்றும் தெரியவந்துள்ளது. இந்த பாசமிகு காட்சி டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு கிடைத்துள்ளது. அதை அந்நிறுவனம் பகிர்ந்துள்ளது….