சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்களை மூடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு – நீதிமன்றம்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்களை மூடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 47 சட்டவிரோத ரிசார்ட்கள் செயல்படுகின்றன என தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும்…