ஜெயலலிதா வழங்கிய யானை உட்பட 2 யானைகள் மீது கொடூர தாக்குதல்; குருவாயூர் பாகன்கள் மீது வழக்கு!
கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற குருவாயூர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி எழுந்தருளல், ஸ்ரீவேலி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில கோயில்களில் கோசாலை அமைத்து பசுக்கள் பராமரிக்கப்படுவது போன்று, குருவாயூர் கோயிலில் யானைக்கோட்டையில் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. யானைகளைப் பராமரிக்க குருவாயூர் தேவசம்போர்டு சார்பில் பாகன்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குருவாயூர் கோயிலில் உள்ள கிருஷ்ணா, கேசவன் ஆகிய இரண்டு யானைகளையும் பாகன்கள் தடியால் கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவேலிக்கு அழைத்துச்…