மின்கம்பத்தின் உச்சியில் சிக்கி தவித்த மலைப்பாம்பு.. லாவகமாக மீட்ட வனத்துறை ஊழியர்-வீடியோ
கேரளா மாநிலம் கொச்சி தோப்பன்பட்டியின் மின் கம்பத்தின் உச்சியில் சிக்கி கொண்ட மலைப்பாம்பை வனத்துறை ஊழியர் லாவகமாக மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கொச்சி தோப்பன்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் உச்சியில் மலைப்பாம்பு ஒன்று சிக்கிக்கொண்டது. மின் கம்பத்தில் ஏறிய அந்த மலைப்பாம்பு மின்கம்பத்தின் உச்சிக்கு சென்றபோது அதில் செல்லும் மின் கம்பி மற்றும் கேபிள் ஒயர்களில் சிக்கி நகர முடியாமல் தவித்தது. இதைக் கண்ட பொதுமக்கள்…