வேலைசெய்யும் நிறுவனத்திலேயே லட்சக்கணக்கில் கொள்ளையடித்து நாடகம் – காட்டிக்கொடுத்த சிசிடிவி
தனது கூட்டாளியுடன் சேர்ந்து திட்டமிட்டு தான் பணிபுரியும் பட்டய கணக்கியல் நிறுவனத்திலிருந்து ரூ.13.75 லட்சம் பணத்தை கொள்ளையடித்த ஊழியர் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். எப்படி? பார்க்கலாம். மும்பையிலுள்ள முலுந்த் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பி.கே சாலையிலுள்ள பட்டய கணக்கியல் நிறுவனத்தில் பணிபுரிபவர் சுமித் வடேகர். இவர் சனிக்கிழமை மதியம் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளார்களிடமிருந்து பணத்தை சேகரித்துவிட்டு அலுவலகம் திரும்பினார். அப்போது அங்குவந்த மர்ம நபர் ஒருவர் குளோராஃபார்ம் தடவிய கைக்குட்டையை வடேகரின் முகத்தில் வைத்து அழுத்தியதில் அவர் மயங்கிவிழுந்தார்….