இதுவரை நாலரை லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் – சபரிமலை யாத்ரீகர்கள் மகிழ்ச்சி!
தேவஸ்வம் போர்டின் அன்னதான மண்டபங்கள் மூலம் நாலரை லட்சம் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் சபரிமலை சன்னிதானம் மற்றும் மாளிகப்புறம் ஆகிய இடங்களில் அன்னதான மண்டபங்கள் இயங்கி வருகின்றன. அன்னதான மண்டபங்கள் மூலம் இந்தாண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட, நவம்பர் 16ம் தேதி முதல் கடந்த 17 நாட்களில் நாலரை லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அன்னதான மண்டபங்களில் தினமும் சராசரியாக 22 ஆயிரம்…