கேரளாவில் பைக்கை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளியை காப்பாற்றிய தன்னார்வலர்கள்
கேரளாவை சேர்ந்த கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஒருவரை அங்கிருந்த தன்னார்வலர்கள் துரிதமாக செயல்பட்டு மருத்துவமனை அழைத்துச்சென்று காப்பாற்றியுள்ளனர். கேரளாவில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதியில்லாத கொரோனா நோயாளிகளுக்கென, அரசு சார்பில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு மையமான ஆலப்புழாவின் வட புனப்பாரா மையத்தில், தனிமைப் படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்தினறல் ஏற்பட்டிருந்திருக்கிறது. அவர் தங்கியிருந்த மையத்தில், இவரை போல ஏறத்தாழ 87 நோயாளிகள் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அங்கே மருத்துவ உதவியாளர்களோ, வெண்டிலேட்டர் வசதியோ இல்லாமல் இருந்திருக்கிறது. இரவு…