வரலாறு காணாத வறட்சி… 10 மாதங்களில் 205 யானைகள் பலி – இது கென்யாவின் சோகம்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் வரலாறு காணாத வறட்சியின் காரணமாக 10 மாதங்களில் 205 யானைகள் பலியாகி இருப்பது சூழலியல் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. அதில் பிப்ரவரி தொடங்கி அக்டோபர் மாசம் வரை கடுமையான வறட்சி காணப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக யானைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் பலியாகி இருக்கின்றன. ஆப்பிரிக்காவின் வானிலை கணிப்புப்படி இன்னும் கூட கென்யாவில் மழை பொழிவுக்கான சாத்தியங்கள் இல்லாததால்…