விவேகானந்தர் பாறையில் இருந்து வள்ளுவர் சிலை வரை கண்ணாடி இழைப் பாலம் – அமைச்சர் தகவல்
விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி இழைப்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்த பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரவாயல் துறைமுகம் இடையேயான உயர்மட்ட மேம்பால பணிகளுக்காக ஏற்கனவே நில எடுப்பு…