குரூப் 1 தேர்வர்களுக்கு அரசே கொடுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள்! எங்கு நடக்கிறது தெரியுமா?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் தேர்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்தவகையில் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. அவற்றுக்கான தற்காலிக விடைத்தாள்களும் வெளியிடப்பட்டன. இத்தேர்வுகளை தொடர்ந்து, குரூப் 1 தேர்வும் விரைவில் நடைபெற உள்ளது. கடந்த ஜூலை மாதம், இதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு…