`குன்றாறும் குடிகொண்ட முருகா…’ பழனி முருகனுக்கு தமிழில் கோலாகலமாக குடமுழுக்கு விழா!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமர்சையாக நடைபெற்று வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறக்கூடிய இந்த குடமுழுக்கு விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். குடமுழுக்கு விழாவிற்காக கடந்த 23 ஆம் தேதி மலை மீது 90…