`நெகிழ்ந்த மக்கள்!’ – மீனாட்சிஅம்மனை தரிசிக்க வந்தவர்களுக்குக் குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்!
மதுரை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 12 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் அம்மனும் சுவாமியும் மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர் மீனாட்சியம்மன் இந்நிலையில் 4 -ம் நாள் நிகழ்வாக நேற்று மாலை சுவாமியும் அம்மனும் வில்லாபுரத்திலுள்ள பாவாக்காய் மண்டகப்படியிலிருந்து புறப்பட்டு கோயிலுக்கு வருகை தந்தனர். மதுரை தெற்குவாசல் பகுதியில் சுவாமியும் அம்மனும் வீதி…
பல்லடம் நால்வர் கொலை வழக்கு; குற்றவாளிகள் 4 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனைகள் – நீதிமன்றம் அதிரடி!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வந்த மோகன்ராஜ், அவரின் சகோதரர் செந்தில்குமார், மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினம்பாள் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டது, தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கையில், கள்ளக்கிணறு பகுதியில் வசித்த திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற ராஜ்குமார்,…