சேலம்: `சிறைக்குக் கொண்டுவரப்பட்ட வாழைப்பழம்; உள்ளே சிம்கார்டு, மெமரிகார்டு..!’ – கைதியிடம் விசாரணை
சேலம் மத்திய சிறையில் தடுப்புக் காவல் சிறைவாசியாக இருந்து வருபவர் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார். இவர்மீது சேலம் மாநகரக் காவல் நிலையங்களில் வழிப்பறி, பைக் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், 26.09.2023 அன்று டவுன் திருவள்ளுவர் சிலை அருகேயுள்ள பெட்ரோல் பங்க்கில் விஜய் என்கிற `சைக்கோ’ விஜய் எனும் நபர் நின்றுகொண்டிருந்தபோது, பிரேம்குமார் உள்ளிட்ட சிலர் பட்டாக்கத்தியால் வெட்டியுள்ளனர். இந்த வழக்கில் பிரேம்குமார் அவரது நண்பர்களை போலீஸார் கைதுசெய்து, சேலம் மத்திய…