கொல்லப்பட்ட இளம்பெண்; காரில் சடலத்துடன் சுற்றிய இளைஞர்… சுட்டுப் பிடித்த போலீஸ்! – உ.பி அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் நர்சிங் படித்துக்கொண்டிருந்த மாணவி, அண்மையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டிருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, விசாரணை நடத்தி வந்தது. அதில், நர்சிங் படித்து வந்த மாணவி, மகேந்திரன் என்பவரைக் காதலித்து வந்தது தெரியவந்தது. காவல்துறை இது தொடர்பாக காவல்துறை, மகேந்திரனை வெள்ளிக்கிழமை கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து அவரின் மாமாவையும் நேற்று கைதுசெய்திருக்கிறது. இது குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, “வியாழக்கிழமை காலை…