CSK: “இவங்க இருக்க வரைக்கும் எனக்கு கவலை இல்லை!” – சிஎஸ்கேவின் புதிய கேப்டன் ருத்துராஜ்
‘எனக்கு எந்தக் கவலையும் இல்லை. சீசனை அனுபவித்து ஜாலியாக ஆடப்போகிறேன்.’ என சென்னை அணியின் புதிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் பேசியிருக்கிறார். 2024 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் இன்று முதல் ஆரம்பமாகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருக்கிறார். தோனி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில் அவருக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்பதால்…