ஏழு வாரங்களுக்குப் பிறகு 50,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்
இந்தியாவில் கொரானாவின் பாதிப்பு குறைவதற்கான அறிகுறிகள் தொடங்கி இருப்பதால், இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன. தினசரி பாதிப்புகள் 3 லட்சத்துக்கு கீழ் சரிந்துள்ளது. தவிர, ஆசிய சந்தைகளும் சாதமாக இருப்பதால், இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. 7 வாரங்களுக்கு பிறகு சென்செக்ஸ் மீண்டும் 50,000 புள்ளிகளைக் கடந்து உயர்ந்தன. சென்செக்ஸ் 613 புள்ளிகள் உயர்ந்து 50,193 புள்ளிகளில் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 25 பங்குகள் உயர்ந்து முடிந்தன. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி…