அலர்ட்: கொரோனா தீவிரம் எதிரொலி: உயருகிறதா காப்பீடு பிரீமியம்?
கொரோனா அனைத்து விதிகளையும் மாற்றி இருக்கிறது. மருத்துவ காப்பீடு இருப்பவர்களுக்கு, ஆயுள் காப்பீடு இருப்பவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், தற்போது காப்பீடு நிறுவனங்கள் அதிக இழப்பீடு தொகையை கொடுத்திருப்பதால் இனி பிரீமியம் உயரும் என தெரிகிறது. இதுகுறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம். ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு இழப்பீடு அல்லது மருத்துவ சிகிச்சைக்கு க்ளைம் கொடுப்பது என்பதற்கு பொதுவான விதிகள் இருக்கும். அதனை அடிப்படையாக வைத்தே ப்ரீமியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சமயங்களில் பெரு மழை, இயற்கை பேரிடர்கள் நடந்தால்…