எல்ஐசி ஐபிஓ அளவைவிட 3 மடங்கு பங்குகளை வாங்க குவிந்துள்ள விண்ணப்பங்கள்
ஐபிஓ மூலம் எல்ஐசி பங்குகளை வாங்க விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், மத்திய அரசு விற்பனைக்கு கொண்டு வந்துள்ள எல்ஐசி பங்குகளை போல மூன்று மடங்கு வாங்க விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவிகித பங்குகளை, அதாவது 22.13 கோடி பங்குகளை விற்று கிட்டத்தட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு ஐபிஓ வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சென்ற திங்கள்கிழமை முதல் கிட்டத்தட்ட 66 கோடி எல்ஐசி பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன….