“என்ன மன்னிச்சிடுங்க”.. கண்கலங்கிய இரவின் நிழல் நடிகை! விளக்கம் கொடுத்த பார்த்திபன்!
தனது பேச்சுக்கு சமூகவலைத்தளங்களில் கண்டனம் எழுந்தநிலையில், சமூகவலைத்தளங்கள் மட்டுமின்றி செய்தியாளர்கள் சந்திப்பிலும் பிரிகிடா மன்னிப்பு கோரியுள்ளார். நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள ‘இரவின் நிழல்’ திரைப்படம், கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப்படத்தில் பிரிகிடா, ரேகா நாயர், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர்…