சோழர்களின் அரண்மனைகள் குறித்த ஜெ.மோ.வின் சர்ச்சை கருத்து- பதிலளித்த நெட்டிசன்
பொன்னியின் செல்வன் நாவல் தற்போது படமாக உருவாகி வரும் வேளையில், அப்படத்தின் வசனகர்த்தாவும் பிரபல எழுத்தாளருமான ஜெயமோகன் சோழர் அரண்மனைகள் குறித்து தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. “சோழ அரண்மனைகள் குறித்து மிகைப்படுத்திதான் கூற வேண்டும். ஏனென்றால் அவர்களது அரண்மனைகள் எல்லாம் மரத்தாலானவையாக இருக்க வேண்டும். அவர்களது அரண்மனை குறித்து நம்மிடம் மாதிரி வடிவங்கள் இல்லை. கங்கை கொண்ட சோழபுரத்தில் மாளிகை மேடு என்னும் இடத்தில் ராஜேந்திர சோழனின் அரண்மனையின் மண்ணாலான அடித்தளம் மட்டுமே நமக்கு…