“தியேட்டரிலிருந்தபடி படத்தை சிறு சிறு வீடியோக்களாக எடுத்து பரப்புகின்றனர்”- ஜிவிஎம் வேதனை
“நிறைய உழைத்து, பணம் செலவிட்டு திரைப்படங்களை எடுக்கும் நிலையில், செல்போனில் அதை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் படக்காட்சியை பதிவிடுகின்றனர். இது வேதனை அளிக்கிறது” என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கௌதம் வாசுதேவ் மேனன் அண்மையில் திரைக்கு வந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ‘மல்லிப்பூ வச்சு…