‘எங்கெங்கும் ஐயப்பனின் சரண கோஷம்’ – கார்த்திகை 1-ல் மாலை அணிந்த பக்தர்கள்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை முதலே ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்தனர். ஐயப்ப பக்தர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். 41 நாள்கள் விரதத்தை மேற்கொள்ள ஏதுவாக கார்த்திகை முதல் நாளிலேயே பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். இதேபோன்று சென்னை எம்.ஆர். நகர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் பக்தர்கள் ஆர்வமும் மாலை அணிந்து…