அண்மையில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விஜய் உரையாற்றியிருந்தார்.
அதில் ஆளும் கட்சியை விமர்சித்துப் பேசியும், அதன் கூட்டணிக் கட்சியான வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி குறித்தும் பேசியிருந்தார். இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “விஜய் கண்டிப்பாக ஜெயிப்பார். அவருடைய அரசியல் நகர்வு நன்றாக இருக்கிறது என்றார். அதைத் தொடர்ந்து விஜய் வி.சி.க. கட்சியுடன் கூட்டணி வைப்பாரா? அவரது பேச்சால் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மாறியதாக கருத்துகள் வருகிறது அதைப் பற்றி சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பியபோது அதற்கு அவர் பதிலளிக்காமல் கடந்து சென்றிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs