ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவால் 7 பேர் உயிர் இழந்துள்ளனர். பெரும்பாலான வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புயல் பாதிப்பையடுத்து ரூ. 2 ஆயிரம் கோடி நிவாரணம் நிதி அளிக்குமாறு பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்நிலையில், மதுரை எம்.பி சு. வெங்கடேசன் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உடனடியாக ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தைத் தந்துள்ளதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், “புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உடனடியாக ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தைத் தந்துள்ளேன்.
குறிப்பாக, தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மக்களின் அன்றாட வாழ்வு நிலை குலைந்து இருக்கிறது. உயிரிழப்புகளும், சொத்து – ஆதார கட்டுமானங்கள் – பயிர்கள் பெரு நாசத்திற்கு ஆளாகியுள்ளன.
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உடனடியாக ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை தந்துள்ளேன்.
குறிப்பாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மக்களின் அன்றாட… pic.twitter.com/Usop6cdOLc
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 3, 2024
லட்சக்கணக்கான மக்கள் பெரும் துயரில் ஆழ்த்தப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதியைத் தாமதமின்றி வழங்கி வாழ்க்கைக்காகப் போராடும் மக்களின் துயர் துடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்காக அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கோரியுள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal
