நெல்லை: சேரும் சகதியுமான சாலைகள்; நடந்து செல்வதே சாகசம்தான்… அவதியில் ராதாபுரம் மக்கள்..!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட ப்ரைட் நகர் பகுதியில் சுமார் 120 வீடுகள் வரை இருக்கின்றன. இந்தக் குடியிருப்பு பகுதியில் உள்ள பாதைகள் அனைத்தும், முறையாகச் சாலைகள் அமைத்துத் தரப்படாமல், மண் சாலைகளாக, குண்டும் குழியுமான நிலையில் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என அனைவரும் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த சாலையை கடந்துதான் பிரதான சாலையை அடைய வேண்டிய நிலை உள்ளது.

நெல்லை – ராதாபுரம் ப்ரைட் நகர்

இவ்வாறிருக்க, கடந்த ஒரு வாரமாக ராதாபுரம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, ப்ரைட் நகர் பகுதியில் இருக்கும் பாதைகள் சேறும் சகதியுமாக நடந்து செல்வதே சிரமமாக மாறியிருக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்த பிறகு குழிகளில் மண் கொட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இது தற்காலிக தீர்வுதான் என்றும், முறையாக புதிய சாலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதுதான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நெல்லை – ராதாபுரம் ப்ரைட் நகர்

இது குறித்து பிரைட் நகர் மக்களிடம் பேசியபோது, “மழைக் காலங்களில் நடந்து போக முடியாத அளவுக்குத் தெருக்கள் சேதமடைகிறது. எங்களின் தேவைகளுக்காக ஒரு நாளைக்குப் பத்து முதல் பதினைந்து தடவைக்கும் மேல் இந்தச் சாலையில் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள், வாரம் ஒருவர் தடுமாறி கீழே விழும் நிலை உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்தப் பிரச்னையை கவனத்தில் கொண்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb