‘அமெரிக்காவை பார்த்து இந்தியா நடுங்கவில்லை’ என்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார் டோனால்டு டிரம்ப்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர், “இன்று பல நாடுகள் அமெரிக்காவை நினைத்து நடுங்கி கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியா அப்படி இல்லை.
டிரம்ப் பிரதமரானதும் அவர் பேசிய முதல் மூன்று போன் கால்களில் பிரதமர் மோடியின் போன்கால் ஒன்று. பிரதமர் மோடி பல அமெரிக்க அதிபர்களுடன் நல்ல நட்புறவை பேணி உள்ளார். மோடி பிரதமராக முதன்முதலாக அமெரிக்கா சென்றப்போது ஒபாமா பிரதமராக இருந்தார். பின்னர், டிரம்ப்… அவருக்கு பின்னர் பைடன். அவர் இயல்பாகவே அனைவருடனும் நட்பை ஏற்படுத்திவிடுவார். இது நமக்கு பெரிதும் உதவுகிறது” என்று இந்தியா – அமெரிக்கா உறவு குறித்து பேசினார்.
அமெரிக்கா அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன், அவர் தற்போது உலகில் நிலவி வரும் பல்வேறு விஷயங்களில் எப்படி முடிவு எடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘இந்தியா அதிக வரியை விதித்து வருகிறது’ என்று குற்றம் சாட்டி வரும் டிரம்புடன் இந்தியாவின் உறவு எப்படி இருக்கும் என்று உலக நாடுகள் பார்த்து வருகிறது. அந்தக் கேள்விக்கான பதிலை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb