மேகாலயா டு கோவை; தபால் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள்கள்; வெளியான அதிர்ச்சி பின்னணி

கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (நவம்பர் 8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல்துறை தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கோவை

மேகாலயா மாநிலம் சில்லாங் பகுதியிலிருந்து கோவைக்குப் போதை மருந்து கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. விசாரணையில் எல்.எஸ்.டி போதை அட்டை, மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை இந்தியத் தபால் மூலம் கோவையில் விற்றுள்ளனர்.

இந்த கும்பல் கடந்த ஓராண்டாகவே இந்த செயல்களில் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு முறையும் தபால் பார்சலில் சுமார் 4.5 கிலோ எடை கஞ்சாவைக் கடத்தி விற்று வந்துள்ளனர். தபால்துறையில் இது எப்படிச் சாத்தியமானது, அங்கு பார்சல் அனுப்புவதற்கு என்ன முறையைப் பின்பற்றுகிறார்கள் என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

கைது செய்யப்பட்டவர்கள்

இந்த வழக்கில் கோவையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் மற்றும் ராஜஸ்தான், மேகாலயாவைச் சேர்ந்த இருவர் உள்பட 7 பேரைக் கைது செய்துள்ளோம்.

ஏற்கெனவே  கர்நாடகா, ஹரியானா மற்றும் கேரளாவிலிருந்து போதை மாத்திரை கடத்தி விற்பனை செய்த கும்பல்களைக் கைது செய்துள்ளோம். தற்போது ராஜஸ்தானிலிருந்து 7,500 மாத்திரைகளை ரயிலில் கடத்திய மற்றொரு கும்பலைப் பிடித்துள்ளோம்.

போதை பொருள்

ஒவ்வொரு மாத்திரையையும் அங்கு ரூ.60க்கு வாங்கி, இங்கு ரூ.300க்கு விற்கின்றனர். அந்த கும்பலைப் பிடிக்காவிடில் ரூ. 25 லட்சத்துக்கு அதை விற்பனை செய்திருப்பார்கள். போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb