ஈரோடு: குழாய் பதிக்க ரூ.2.50 லட்சம் லஞ்சம் – ஊராட்சி நிர்வாகிகளை கூண்டோடு தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன், கனகராஜன். விவசாயிகளான இவர்கள் இருவரும் தங்களது விவசாயத் தோட்டத்துக்கு தண்ணீர் குழாய் அமைக்க தடையில்லாச் சான்றிதழ் மற்றும் அதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்கும்படி கொத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா மற்றும் துணைத் தலைவர் செல்வம், ஊராட்சி செயலர் ராஜன் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர்.

ஆனால், மாதக் கணக்கில் இழுத்தடித்ததால் அதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் செல்வன் ஆகியோரிடம் ரவிச்சந்திரன், கனகராஜன் கேட்டுள்ளனர். அதற்கு ரூ. 2.50 லட்சம் பணம் கொடுத்தால்தான் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

ஊராட்சி மன்ற அலுவலகம்

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ரவிச்சந்திரன், கனகராஜன் இருவரும் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை ஆலோசனைப்படி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் கேட்டரூ. 2.50 லட்சத்தை கொடுத்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஊராட்சி செயலாளர் ராஜன், ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா மற்றும் துணைத் தலைவர் செல்வன் ஆகியோரை கைது செய்தனர். குழாய் பதிக்க ரூ.2.50 லட்சம் லஞ்சமாக கேட்டது ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88