Tamil News Live Today: விக்கிரவாண்டி பிரசாரத்தில் திமுக தலைவர்கள் குறித்து அவதூறு; நா.த.க சாட்டை துரைமுருகன் கைது!

விக்கிரவாண்டி பிரசாரத்தில் திமுக தலைவர்கள் குறித்து அவதூறு; நா.த.க சாட்டை துரைமுருகன் கைது!

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது சாட்டை துரைமுருகன், திமுக தலைவர்கள் குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

சாட்டை துரைமுருகன்

அது தொடர்பாக திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் மீது திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இன்று காலை சாட்டை துரைமுருகனைத் தனிப்படை போலீஸார், தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகில் வைத்துக் கைதுசெய்திருக்கின்றனர். அவரை திருச்சிக்கு அழைத்துவந்த விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb