Tamil News Live Today: `தண்டனை கடுமையாக்கப்படும்’ – மதுவிலக்குச் சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல்!

`மதுவிலக்குச் சட்டம் – திருத்த மசோதா இன்று தாக்கல்!’ 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஆளும் திமுக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது, இந்நிலையில் , மதுவிலக்கு சட்டத்தில் தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

நேற்றைய சட்டப்பேரவை விவாதத்தின் போது, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “உயிருக்கு ஆபத்துவிளைவிக்கக் கூடிய பொருட்களை காய்ச்சுதல், விற்பனைசெய்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதல்கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் -1937ல் திருத்த மசோதா ஒன்று சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்படும்.” என்றார். இன்று சட்டப்பேரவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88