நீலகிரி மலையில் ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் முடிவில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஊட்டி நகராட்சியில் இதற்கென சிறப்பு நகர்மன்ற கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டு, ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊட்டியைச் சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளான கேத்தி, நஞ்சநாடு, உல்லத்தி, தொட்டபெட்டா போன்ற பல கிராமங்களை இணைத்து மாநகராட்சியாக அறிவிக்கும் அரசின் முடிவுக்கு உள்ளூர் மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். நீலகிரியில் உள்ள மலை கிராமங்களை மாநகராட்சியாக அறிவிக்கும் அரசின் முடிவை கைவிடுமாறும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மக்கள் நல அமைப்பினர்

இந்நிலையில் , நீலகிரி மக்கள் நல அமைப்பைச்‌ சேர்ந்த சங்கத்தினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஊட்டியை மாநகராட்சியாக உயர்த்தும் அளவிற்கு மக்கள் தொகை, தொழிற்சாலை, வருவாய், வளர்ச்சி கட்டமைப்பு போன்ற எதுவும் கிடையாது. நூற்றுக்கணக்கான மலை கிராமங்களில் மக்கள் பாரம்பர்யமான முறையில் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாயமே முதன்மைத் தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் விளை நிலங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட்டாக மாறும் அபாயம் இருக்கிறது. ஒருவேளை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அனைத்து வகையிலும் ஆதாயம் கிடைக்கும். ஏழை எளிய மக்கள் மீது வரிச்சுமை கடுமையாக உயரும். மலை கிராமங்களை மாநகராட்சியாக அறிவிக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களைத் திரட்டி பெரும் போராட்டத்தை நடத்துவோம். நீதிமன்றத்தின் உதவியை நாடவும் தயாராக இருக்கிறோம் ” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.