“தனி மனிதனைப் பாதுகாக்க, முழு அரசையும் களமிறக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!” – அண்ணாமலை
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று மதியம், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார். பின்னர் அந்த உத்தரவை அவரே தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார். ஓர் அமைச்சரை, அமைச்சரவையிலிருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதற்குள் பா.ஜ.க செல்ல விரும்பவில்லை. 1979-ம் ஆண்டு நடந்த ‘கருணாநிதி வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா’ வழக்கு விசாரணையில், குறிப்பிட்ட அமைச்சரை நீக்க…
`கோமாளி’யாக நடமாடி வந்த வரிச்சியூரான்; கொலை வழக்கில் தூக்கிய ஐ.ஜி அஸ்ரா கார்க்!
“நான் தாதா இல்லை… தாத்தா… ஜோக்கர்… எந்தக் குற்றத்திலும் இப்போ ஈடுபடுறதில்லை. பரம்பரைச் சொத்துல வர்ற வருமானத்துல ஜாலியா இருக்கேன். என் பேரப்பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும்” என்று மீடியாக்களிடம் சொல்லிவந்த பிரபல தாதா வரிச்சியூர் செல்வம், தன் கூட்டாளியைக் கொடூரமாகக் கொன்ற வழக்கில் தற்போது கைதுசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வரிச்சியூர் செல்வம் “தனக்காகப் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவரையே கொலைசெய்து, ஆற்றில்போட்ட வரிச்சியூரானை நம்பியிருக்கும் நம் நிலைமையும் ஒருநாள் இப்படித்தான் ஆகுமா?” என்று கூட்டாளிகளும், வரிச்சியூரானுக்குப் பலவகைகளிலும்…