ஆளுநர் ரவியைச் சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மனு!

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க துரித நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரியும், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையில் தலைமையில் அந்தக் கட்சியினர், ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து மனு அளித்தனர்.

ராஜீவ் காந்தி 32-வது நினைவு தினம்; காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியிலுள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

`சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை…’ – வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை தற்போது மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.