கலாஷேத்ரா பாலியல் புகார் பிரச்னை; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை; மாணவிகள் போராட்டத்தால் கல்லூரி மூடல்
சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கடளை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக அக்கல்லூரியின் முன்னாள் இயக்குநர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் டி.ஜி.பிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, கலாஷேத்ரா புகார் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார் டி.ஜி.பி சைலேந்திர பாபு. கலாஷேத்ரா இதனிடையே, பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட மாணவி, தனது பெயரையும் கல்லூரியின்…