சட்டசபை: `பெரிய துளை இருக்கும்போது சின்ன துளை எதற்கு?!’ – அண்ணா சொன்ன கதையை நினைவூட்டிய பொன்முடி
சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி ‘அண்ணா சொல்லும் குட்டிக்கதையைப் பேசி’ அரங்கத்தில் உள்ளவர்களைச் சிரிக்க வைத்தார். அமைச்சர் பொன்முடி ’அயலக மொழி’ குறித்து பேசியபோது, “அண்ணா இருமொழி கொள்கையைத் தீவிரமாகப் பேசினார். அவர் ’ஆங்கிலம், தமிழ் இருந்தால் போதும்’ என்றார். புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கறவர்கள் இங்கு இருக்கிறார்கள். ’ஏன் அண்ணா மும்மொழி கொள்கையை எதிர்த்தார் என்பதை அவங்களும் தெரிஞ்சுக்கட்டும்’ எனக்…