ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை என தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய அலுவலில், ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ‘ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை’ எனக்கூறி, பேரவையில் இருந்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

image

இதனிடையே ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா சிலை அருகில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா, காங்கிரஸ் – திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு, பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.