ராகுல் காந்தி தகுதி நீக்கம் – சட்டப்பேரவையில் விவாதம் நடத்தப்படும்!

காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, இன்று தமிழக சட்டப்பேரவையில் விவாதம் நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது

இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கூடும் தமிழக சட்டப்பேரவை!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 20-ம் தேதி 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த இரு நாள்களாக சனி ஞாயிற்றுக்கிழமைகளால் சட்டப்பேரவை கூட்டத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

சட்டப்பேரவை

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் விவாதம் தொடர்கிறது. இன்றைய கூட்டத்திற்கு ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.