சச்சின் டெண்டுல்கர் மற்றும் அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோரை குறிப்பிட்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.
இந்தியாவில் வரும் அக்டோபரில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் பொதுவாகவே சொந்த மண்ணில் பலம்வாய்ந்த அணியாக திகழ்ந்துவரும் இந்திய அணி, இம்முறை 2011க்குப் பின் எப்படியாவது கோப்பையை வெல்ல போராட உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார். அதில் அவர், ”இந்திய அணிக்கு தற்போது உலகக் கோப்பையை வெல்ல நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இறுதிப் போட்டி, அரை இறுதிப் போட்டி என தொடர்ந்து தகுதி பெறுகிறார்கள்.
நீங்கள் சச்சின் டெண்டுல்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஆறு முறை உலக கோப்பை போட்டியில் விளையாடி இருக்கிறார். ஆறு உலகக் கோப்பைத் தொடர் என்றால் 24 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார். ஆனால் அவர் கடைசி உலக கோப்பையை தான் வென்றிருக்கிறார். இதேபோன்றுதான் கால்பந்து போட்டியில் மெஸ்ஸியும் அவர்களெல்லாம் எவ்வளவு ஆண்டுகள் உலகக்கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறார்கள். மெஸ்ஸி கோபா அமெரிக்காவை வென்றவுடன் உலக கோப்பையும் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் தான் சொல்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் நிச்சயமாக மழை பெய்யும்” என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.