வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்:

  • டிடிவி தினகரன், சசிகலாவை சந்திப்பது குறித்த கேள்விக்கு..

வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன் உறுதியாக. கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன்.

  • இபிஎஸ் குறித்த கேள்விக்கு..

எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை சட்ட நியதிக்கு புறம்பாக நடைபெறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

image

  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு..

மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

  • பட்ஜெட் குறித்த கேள்விக்கு..

தமிழக அரசு நிதிநிலை அறிக்கை வருகிற 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்தவுடன் என்னுடைய கருத்தை சொல்கிறேன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.