நிதி நெருக்கடி என்பது எல்லோரும் எதிர்நோக்கும் ஒன்று தான் என்றாலும், நெருக்கடியான காலகட்டத்தில்  பற்றாக்குறையான நிதியை எவ்வாறு பெறலாம் என்பது குறித்து பலபேருக்கு பலவித சந்தேகங்கள் ஏற்படும். அத்தகைய சந்தேகங்களுக்கு நிவர்த்தியாக இந்த வீடியோவானது உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம்.

நிதி நெருக்கடி ஏற்படும் போது, எளிதாக பணத்தை ஏற்பாடு செய்து பெற்றுக்கொள்வது தான் தனி நபர் கடன். இந்த கடனை பெறுவதற்கு எந்த வித சொத்தையோ அல்லது, பொருளையோ அடமானம் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த கடனை பெறுவதற்கு வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கேட்கும் சிபில் ஸ்கோர் வைத்திருக்கவேண்டும்.

வீட்டு புரணமைப்பு, மருத்துவச்செலவு, கல்வி என எந்த நோக்கத்திற்காகவும் தனி நபர் கடன் பெறலாம். வெவ்வேறு வட்டிகளில் விகிதங்களில் சந்தையில் தனி நபர் கடன் கிடைக்கிறது. குறிப்பாக ஒரு நபர் 1,00,000 கடன் பெறுவார் என்றால், வாங்கிய கடனை மூன்றாண்டுக்குள் திருப்பி செலுத்துவார் என்று வைத்துக்கொண்டால், வாங்கிய கடன் 1,00,000 க்கு, 14 % வட்டியாக 3418 ரூபாய் மாதந்தோரும் செலுத்தி வந்தால் மூன்றாண்டின் முடிவில் அவர் வட்டியாக செலுத்திய தொகை ரூபாய் 23,048 மற்றும் கடனாக வாங்கிய தொகை 1,00,000 ஆக மொத்தம் 1,23,048 ரூபாட் திரும்ப செலுத்தி இருப்பார்.

தனி நபர் கடன் அவசியம் தானா? அவ்வாறு கடன் பெரும்பொழுது நாம் கவனிக்கவேண்டியவை என்னென்ன…. என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.