வங்கதேசம் மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டியில் படுதோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி.

இன்று நடந்த இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில், வங்கதேச அணியை 136 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையிலும் கடைசி 1 விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தடுமாறிய இந்திய அணி, இறுதியில் தோல்வியை தழுவியது.

முதலில் ஆடிய இந்திய அணி வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 41.2 ஓவர்கள் முடிவில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்கள் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகள் மற்றும் எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் இந்திய அணியில் அதிகபட்சமாக 5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 73 ரன்கள் எடுத்தார்.

image

பின்னர் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் 136 ரன்களில் 9 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். பின்னர் எளிதாக இந்திய அணி வென்றுவிடும் என்ற இடத்தில் கைக்கோர்த்த மெஹிதி ஹசன் மற்றும் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இருவரும் கடைசிவிக்கெட்டை விட்டுகொடுக்காமல் இறுதி வரை நின்று விளையாடினர். தொடர்ந்து நோ-பால், மிஸ் பீல்ட், கேட்ச் என கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்ட இந்திய அணியை போட்டியையும் தவறவிட்டது. முடிவில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது வங்கதேச அணி.

image

கேட்சை தவறவிட்ட விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல்!

image

43ஆவது ஓவரில் 4ஆவது பந்தை ஷர்துல் தாஹூர் வீச, அதை மெஹிதி ஹசன் அடிக்க அந்த பந்து விக்கெட் கீப்பருக்கு மேலாக காற்றில் பறக்கும். சரியாக பந்துக்கு அடியில் சென்ற விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கேட்சை பிடிக்காமல் தவறவிடுவார். அனைத்தையும் சரியாக செய்த ராகுல் கேட்சை கோட்டைவிட்டது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேட்சை தவறவிட்ட ராகுல் போட்டியையும் தவறவிட்டார்.

வாசிங்டன் சுந்தருக்கு எதிராக கோவத்தை காட்டிய ரோகித் சர்மா!

image

கேஎல் ராகுல் கைக்கு கிடைத்த கேட்சை கோட்டைவிட, அடுத்த இரண்டாவது பந்தில் இடது பக்கம் ஸ்கொயர் லாங்க் ஆன் பீல்டில் இருந்த வாசிங்டன் சுந்தர் காற்றில் பறந்து வந்த பந்தை பிடிக்காமல் மற்றொரு வீரர் கேட்சுக்கு வருகிறார் என்று தவறாக எண்ணி பந்தை விட்டுவிடுவார். முந்தைய பந்தில் ராகுல், தற்போது சுந்தர் என கேட்சை விட கோபமடைந்த ரோகித் சர்மா, ஆபாசமான வார்த்தைகளை உதிக்க வந்து அடக்கிகொள்வார்.

இந்நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி, எதற்காக சுந்தர் மீது மட்டும் கோவத்தை காமிக்க வேண்டும் என்றும், வாசிங்டன் சுந்தருக்காக வருந்துவதாகவும் பதிவிட்டு வருகின்றனர் ட்விட்டர் வாசிகள். வீடியோவின்படி, ரோகித் சர்மா ஆபாச வார்த்தைகளை குறிப்பிட்டு பேசுவதாக கூறி, அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அந்த வீடியோ, இதோ:


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.