சென்னை அசோக் நகர் ஜவஹர்லால் நேரு 100 அடி சாலையில் அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனம், சென்டர் மீடியனில் மோதியதில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த vodafone service engineer ஜெயசூர்யா(26), கரூர் மாவட்டம் தென்னிலையைச் சேர்ந்த பிரேம்குமார் (28). இவர்கள் இருவரும் அசோக் நகர் ஜவஹர்லால் நேரு 100 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதிவேகமாக சென்ற வாகனம் சென்டர் மீடியனில் மோதியதில் ஜெயசூர்யா, பிரேம்குமார் இவருவருக்கும் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

image
இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இவர்களது பையை சோதனையிட்டதில் அதில், மது பாட்டில்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பையில் மது இருந்ததால் மது அருந்திவிட்டு வாகனத்தில் வந்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.