செம்மரக்கடத்தல்; சினிமா பாணியில் நடந்த சேஸிங்- தமிழகத்தை சேர்ந்த 44 பேரை கைதுசெய்த திருப்பதி போலீஸ்!
ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியிலிருந்து சென்னை நோக்கி, லாரிகளில் செம்மரக்கட்டைகள் கடத்திச்செல்லப்படுவதாக திருப்பதி எஸ்.பி பரமேஸ்வர ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியாக்கள் இருப்பதாகவும் ரகசிய தகவலை வெளியிட்ட மர்ம மனிதர் கூறியிருக்கிறார். இதையடுத்து, எஸ்.பி-யின் உத்தரவின்பேரில் ஏ.எஸ்.பி குலசேகர் தலைமையிலான போலீஸ் படையினர், சென்னை நெடுஞ்சாலையிலிருக்கும் ‘ராஜஸ்தான் தாபா’ அருகில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர். அந்த சமயம், அவ்வழியாக முன்னால் ஒரு காரும் அதன் பின்னால் 2 லாரிகளும் வரிசைக்கட்டி வந்தன….