கத்தார் உலகக் கோப்பை கால்பந்து லீக் சுற்றுப் போட்டிகளில் ஈரான் செனகல் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் லீக் சுற்றின் இரண்டாவது போட்டிகள் விறு விறுப்பான நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான் வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், ஆட்டத்தின் 90+8 வது நிமிடத்தில் ஈரான் வீரர் செஷ்மி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். அதேபோல் ஆட்டத்தின் 90+11 வது நிமிடத்தில் ஈரான் வீரர் ரிஜாயன் ஒரு கோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் ஈரான் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் செனகல் அணியை கத்தார் அணி எதிர்கொண்டது. ரசிகர்களின் ஆரவாரத்தோடு நடைபெற்ற இந்த போட்டியின் 41-வது நிமிடத்தில் செனகல் வீரர் Dia ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கை துவக்கினார். இதையடுத்து ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் செனகல் அணி வீரர் Diedhiou ஒரு கோலும், 84-வது நிமிடத்தில் Dieng ஒரு கோலும் அடித்தனர். ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் கத்தார் அணி வீரர் முன்டாரி ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். இதன் மூலம் செனகல் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து ஈக்குவடர் அணிகள் களம் கண்டன. இதில், ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் காக்போ ஒரு கோல் அடித்து முன்னிலை படுத்தினார். இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஈக்குவடர் வீரர் வலென்சியா ஒரு கோல் அடித்து சமன் செய்தார். இந்நிலையில், 1:1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.
நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி அமெரிக்க அணியை எதிர்த்து விளையாடியது. இதில், ஆட்டத்தின் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது.