பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது பெண்களின் ஹார்மோன்களில் ஏற்படும் சமநிலையின்மையாகும். இது 10 பெண்களில் ஒருவரைப் பாதிக்கிறது. மேலும், பொதுவாகப் பெண்களைப் பருவமடைவதில் இருந்து மாதவிலக்கு நிற்கும் காலம் வரை எந்த நேரத்திலும் இந்த பிரச்சனை ஏற்பட கூடும்.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் ட்ரீட்மெண்ட்டில் இருக்கும் போதும் கூட சில தவறுகளை செய்வதுண்டு, இதனால் இந்த பிரச்சனை மேலும் தீவிரமடைய வாய்ப்புகள் அதிகம் கூடவே சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தாலும் பலனளிக்காது. எனவே இந்த 5 விசயங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன எனப் பார்க்கலாம்..

1) முதலில் தூக்கம் முறையில் செய்யும் தவறை தான் சரி செய்ய வேண்டும். 8 மணி நேரம் தூங்கினால் மட்டும் போதாது. இரவு 10 மணிக்குள் தூங்க சென்று அதிகாலை விழிப்பதால் சூரிய உதயம் முதல் சூரிய மறைவு வரை நமது உடலில் தாக்கம் ஏற்பட்டு, நாம் இயற்கையோடு ஒன்றி இருப்போம். இதனால் ஹார்மோன்கள் சரிவர இயங்க தொடங்கும். லேட் நைட் தூங்க சென்று லேட் மார்னிங் எழுவதற்கு முதலில் நோ சொல்லுங்கள்.

image

2) பூமிக்கு கீழே விளையும் காய்கறியாக கேரட் பீட்ரூட்டில் ஸ்டார்ச் மற்றும் இனிப்பு சுவை அதிகமாக இருக்கும். அதனால் கேரட், பீட்ரூட்டை ஜூஸ்ஸாக குடிக்காமல், சமைத்து பொறியலாகவோ அல்லது சாலட்டாக செய்து சாப்பிட வேண்டும். அதே போல் உருளைகிழங்கு, சேப்பங்கிழங்கு போன்ற மாவுச்சத்து உள்ள கிழங்கு வகைகளிலும் ஸ்டார்ச் அதிகமாக இருக்கும் என்பதால் இதை தவிர்த்து மற்ற காய்கறிகள் சாப்பிட வேண்டும்.

3) பிசிஓஎஸ் இருப்பவர்களுக்கு சுகர் ஒரு வில்லன் தான். இன்று பெரும்பாலும் வெள்ளை சர்க்கரை குறித்த விழிப்புணர்வு வந்துவிட்டது. ஆனால் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக நாட்டு சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி போன்றவை அதிகமாக சேர்த்துக்கொள்கிறோம். நீங்கள் வாங்கும் உணவு பொருட்களிலும் , Sucrose, Maltose, Sucrose , Syrup போன்றவற்றை எழுதப்பட்டு இருந்தால் அதுவும் சுகர் தான் என்ற விழிப்புணர்வுடன் இருங்கள்.

image

4 ) பழங்களை ஜூஸ்ஸாக மிக்ஸில் அடித்து எடுத்து அதை வடிகட்டி , 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து குடிப்பதற்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதனால், பழங்களைக் கடித்துத் தான் சாப்பிட வேண்டும். அப்போது தான் உடலில் சர்க்கரை அளவுக்கு ஏறாமல் இருக்கும். அதேபோல், மிக்ல்ஷேக், திக்‌ஷேக் வகைகளையும் தவிர்க்க வேண்டும். அதேபோல், வீட்டில் மில்க்‌ஷேக் செய்யும் போது நிறைய பீனட்பட்டர், பேரிச்சைபழம் சேர்த்துக் குடிப்பது கலோரியை அதிகரிக்கச் செய்யும்.

5) சிலர் நல்ல வொர்க் அவுட் மற்றும் யோகா செய்வார்கள். ஆனால், உணவில் கட்டுப்பாடோ அல்லது சத்தான உணவைச் சாப்பிடுவதோ செய்ய மாட்டார்கள். மற்ற சிலர், நல்ல டயட் முறையைப் பின்பற்றுவார்கள். ஆனால், தொடர்ச்சியான உடற்பயிற்சியை மேற்கொள்ளமாட்டார்கள். இந்த இரண்டு பழக்கமுமே நன்மையை கொடுக்காது. தொடர்ச்சியான உடற்பயிற்சியும், சரியான உணவு முறையும் தான் கைகொடுக்கும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.