திருவனந்தபுரம் கல்லார் வட்டக்காயத்தில் அருவியில் குளிக்கச்சென்ற 5 பேரில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கல்லார் அருவியில் பொழுது போக்கிற்காக 5 இளைஞர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அருவியில் குளிப்பது தொடர்பாக அங்கு அபாய பலகை வைக்கப்பட்டுள்ளதை அவர்கள் பொருட்படுத்தாமல் குளிக்கச் சென்றுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் அபாய பகுதி எனக் கூறிய போதும் அதனை ஏற்க மறுத்து நீரில் இறங்கியுள்ளனர்.

அப்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு வந்ததால், நிலை தடுமாறி 5 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். 5 பேரில் 2 பேரை அப்பகுதி மக்கள் மீட்டனர். மற்ற மூவரை மீட்க முடியாமல் சென்றது. இவர்கள் அனைவரும் பீமப்பள்ளியைச் சேர்ந்த சஃப்வான், ஃபிரோஸ் மற்றும் ஜவாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

image

விபத்தில் சிக்கியவர்களில் ஒரு சிறுமியும் இருந்துள்ளார். அந்த சிறுமி தான் முதலில் விபத்தில் சிக்கினார். அவரை காப்பாற்றும் போது மற்றவர்களும் ஆபத்தில் சிக்கினர். இதைப் பார்த்த அப்பகுதியினர் சிறுமியை மீட்டனர். ஆனால் சுழலில் சிக்கிய 3 பேரையும் காப்பாற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.