பிரதமர் மோடி இந்தியாவை இந்து ராஷ்ட்ரியமாக அறிவித்தவுடன் இந்துக்கள் அனைவரும் சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் என பொதுகூட்டத்தில் பாடகர் தர்மேந்திர பாண்டே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சித்தார்த்தா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாடகர் தர்மேந்திர பாண்டே கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் மத்தியில் பேசிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை இந்து ராஷ்ட்ரியமாக அறிவித்தவுடன் இந்துக்கள் அனைவரும் சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும். பிரதமர் மோடியிடம் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

உங்கள் வீடுகளின் மீது காவிக் கொடி இருக்க வேண்டும். தீபங்களை ஏற்ற வேண்டும். உங்கள் வீடுகளில் ஒரு கூர்மையான அரிவாளை தயார் செய்யுங்கள். பெண்கள் தங்களுக்கான ஆயுதத்தை வைத்திருங்கள். இந்தியாவை பிரதமர் மோடி இந்து ராஷ்டிரா என்று அறிவித்தவுடன் அவைகள் தேவைப்படும்” என்று தர்மேந்திர பாண்டே பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

image

தர்மேந்திர பாண்டே பேசியதற்கு கண்டனங்கள் எழுந்ததுடன், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: அமித் ஷா ஜம்மு காஷ்மீர் பயணம் எதிரொலி: தற்காலிகமாக முடங்கியது இணைய சேவை!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.